Freelancer / 2025 ஜனவரி 02 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிட்ஸர்லாந்தில், இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“புர்காவுக்கு தடை என்ற உத்தரவு தொடர்பான தீர்மானம் 2021இல் நிறைவேற்றப்பட்டது. இது வரும் ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது என அறிவித்திருந்தது.
“விமானங்கள், தூதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது. வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது.
“உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளலாம். மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது.
“இந்த தடையை மீறுபவர்கள் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால் அதிகபட்சமாக 1 இலட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும்” என குறிப்பிடப்பட்டுள்ளது..
இந்நிலையில், சுவிட்ஸர்லாந்தில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையிலான புர்கா அணிவதற்கு தடை என்ற உத்தரவு, புதன்கிழமை (01) முதல் அமுலுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
7 hours ago