2026 மார்ச் 01, ஞாயிற்றுக்கிழமை

’தாக்குதலுக்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’

Freelancer   / 2026 மார்ச் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்துள்ள பாரிய தாக்குதல்களுக்காக, அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லாரிஜானி இந்தக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஈரானின் வீரமிக்க இராணுவமும் மக்களும் இணைந்து சர்வதேச அளவில் அடக்குமுறைகளைக் கையாளும் இந்த நரகவாசிகளுக்கு மறக்க முடியாத ஒரு பாடத்தைப் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரசு ஊடகம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ஈரான் தனது தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .