Freelancer / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா - சியாட்டிலின் தென்கிழக்கில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிறுமி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியவர் பற்றிய மேலதிக விவரங்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிடவில்லை.
மேலும் தாக்குதலுக்கான காரணம் குறித்தும் பொலிஸார் தெரிவிக்கவில்லை.
கைதான சிறுவனுக்கும் உயிரிழந்தவர்களுக்கும் இடையில் என்ன தொடர்பு இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago