Freelancer / 2025 ஜூன் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் 11 ஆண்டுகளுக்கும் மேலான போரில், அவர்களின் மிகவும் பரவலான ரஷ்ய மரபான மரணத்தையே எமக்கு கொடுத்துள்ளனர் என உக்ரைனிய ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் கூறுகையில்,
"ரஷ்யர்கள் விரும்புவது எமது வாழ்க்கையை முழுமையாக அழிப்பதாகும். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் 11 ஆண்டுகளுக்கும் மேலான போரில், அவர்கள் நம் நிலத்திற்கு ஒரே ஒரு புதிய விடயத்தை மட்டுமே கொண்டு வந்துள்ளனர்.
அது மிகவும் பரவலான ரஷ்ய மரபு, இடிபாடுகள் மற்றும் மரணம் தான். இதை நாம் தொடர்ந்து எதிர்க்க வேண்டும். உலகெங்கிலும் உதவி செய்யும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
ரஷ்யர்கள் போரைத் தொடரத் தயாராகி வருகின்றனர். மேலும் அனைத்து அமைதி திட்டங்களையும் புறக்கணிக்கின்றனர். அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். உக்ரைனின் வான் பாதுகாப்பை வலுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பாக அமெரிக்காவிடமிருந்து எங்களுக்கு அவசரமாக நேர்மறையான சமிக்ஞைகள் தேவை - உதவக்கூடிய அமைப்புகளை வாங்குவதற்கான எங்கள் கோரிக்கைக்கு பதிலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். (a)
37 minute ago
46 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
57 minute ago