ரஷ்யாவின் கிழக்கு யகுதியா பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் சிலரை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று ., ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த , வீதியில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகியது.
குறித்த பேருந்து , 82 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர் என உள்துறை அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.
இந்த விபத்து, டெனிசோவ்ஸ்கி சுரங்கம் மற்றும் பதப்படுத்தும் ஆலை அமைந்த சாலையில் நடந்துள்ளது. இந்த ஆலையில் நிலக்கரி பதப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
ரஷ்யாவில் இதுபோன்ற தொழிற்சாலை சார்ந்த விபத்துகள் நடப்பது பரவலாக காணப்படுகிறது என கூறப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன என விசாரணை அதிகாரிகள் சுட்டி காட்டுகின்றனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணை முன்னேடுக்கப்பட்டு வருகிறது.