2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

வகுப்புகளை தவிர்த்தால் விசா இரத்தாகும்

Freelancer   / 2025 மே 27 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நடைபெற்று வரும் பெருமளவிலான நாடுகடத்தல் சர்ச்சைக்கு மத்தியில், கல்லூரி வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் திட்டங்களை விட்டு வெளியேறுவது தொடர்பாக, இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“நீங்கள் (மாணவர்கள்) உங்கள் பள்ளியைப் பாதியில் நிறுத்தினால், வகுப்புகளைத் தவிர்த்தால் அல்லது உங்கள் படிப்புத் திட்டத்தை உங்கள் பள்ளிக்குத் தெரிவிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் மாணவர் விசா இரத்து செய்யப்படும். 

“மேலும் எதிர்கால அமெரிக்க விசாக்களுக்கான தகுதியை நீங்கள் இழக்க நேரிடும். எந்தவொரு பிரச்சினையையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைக் கடைப்பிடித்து, உங்கள் மாணவர் நிலையைப் பராமரிக்கவும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X