S.Renuka / 2025 ஜூலை 09 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த விதிகள் உள்ளன. அது ஒரு முதலாளியாக இருந்தாலும் சரி, பணியாளராக இருந்தாலும் சரி. அனைவரும் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
அதன்படி, தென் கொரியாவில் தொழிலாளர் தரநிலைச் சட்டத்தின் (LSA) கீழ், வாரத்திற்கு 52 மணிநேரம் (40 வழக்கமான மணிநேரம் +12 கூடுதல் நேர மணிநேரம்) வேலை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த விதி 2018இல் தென் கொரியாவில் அமுலுக்கு வந்தது. அதற்கு முன்பு, அதிகபட்ச வேலை நேரம் 68 மணிநேரமாக இருந்தது.
ஒரு ஊழியர் 52 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், அவர் இதற்காக தண்டிக்கப்படலாம்.
தென் கொரியாவின் பணி கலாசாரம் அதன் கடுமையான விதிகள் மற்றும் சிறந்த பணி நெறிமுறைகளுக்கு பெயர் பெற்றது.
தொழிலாளர் தரநிலைச் சட்டத்தின் (LSA) கீழ் 2018 இல் செயல்படுத்தப்பட்ட 52 மணிநேர வாராந்திர வேலை விதி, தனியார் மற்றும் பொதுத் துறைகள் இரண்டிற்கும் பொருந்தும்.
இது வேலை-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கிறது மற்றும் அதிக வேலைப்பளுவால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் குறைக்கிறது.
தென் கொரியாவில் 52 மணிநேர விதி என்ன?
தென் கொரியாவில், வேலை செய்வது அல்லது ஒருவரை வாரத்திற்கு 52 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய வைப்பது உங்களை சட்ட சிக்கலில் சிக்க வைக்கும்.
இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக ஒருவரை 52 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்ய வைப்பது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு முதலாளி இந்த வரம்பை மீறினால், தொழிலாளர் தரநிலைச் சட்டத்தின் கீழ் அவர்கள் சட்ட மற்றும் குற்றவியல் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிகிறது.
14 minute ago
19 minute ago
26 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
26 minute ago
41 minute ago