2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

165 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு கைக்கடிக்காரம் அனுப்பிவைப்பு

Freelancer   / 2025 மே 25 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்தொன்றில் சிக்கிய கப்பலில் இருந்து கிடைத்த கைக்கடிகாரம் 165 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாண ஏரியில் கடந்த 1860ஆம் ஆண்டு லேடி என்ஜின் என்ற நீராவிக்கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது புயலில் சிக்கி மற்றொரு கப்பல் மீது நீராவி கப்பல் மோதி ஏரியில் மூழ்கியது. அந்த கப்பலில் இருந்த 300 பேர் பலியாகினர்.

விபத்துக்குள்ளான அந்த பகுதியில், கப்பலின் உடைந்த பாகங்களைக் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஹெர்பர்ட் இங்க்ராம் என்பவரின் கைக்கெடிகாரம் 1992ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கைக்கெடிகாரம் மிச்சிகன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், தற்போது 165 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கைக்கெடிகாரம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X