2026 மார்ச் 30, திங்கட்கிழமை

3 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இராணுவ சொத்துகள் சேதம்

Freelancer   / 2026 மார்ச் 30 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீதான அமெரிக்க - இஸ்​ரேல் கூட்​டுத் தாக்​குதல் தொடங்கி மூன்று வாரங்​கள் நிறைவடைந்துள்ள நிலை​யில், ஈரானின் ஏவு​கணை மற்றும் ட்ரோன் தாக்​குதல்​களால் அமெரிக்​கா​வின் 3 பில்லியன் டொலர் மதிப்​புள்ள இராணுவத் தளவாடங்​கள் சேதமடைந்​துள்​ள​தாகத் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

இதுகுறித்து அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘வால் ஸ்ட்​ரீட் ஜர்​னல்' நாளிதழ் செய்​தி​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ஈரான் உடனான மோதல் தொடங்​கிய முதல் மூன்று வாரங்​களில் மட்​டும் அமெரிக்​கா​விற்கு சுமார் 1.4 பில்​லியன் டொலர் முதல் 2.9 பில்​லியன் டொலர் இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக் கணக்​கிடப்​பட்​டுள்​ளது.

இதனை பென்​டகன் முன்​னாள் பட்​ஜெட் அதி​காரி எலைன் மெக்​கஸ்​கர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். ஈரான் நடத்​திய தாக்​குதலில் அமெரிக்​கா​வின் அதிநவீன எஃப்​-35 ரக போர் விமானம் ஒன்று பலத்த சேதமடைந்து அவசர​மாகத் தரையிறக்​கப்பட்​டது. மேலும், குவைத் விமானம் தவறு​தலாகச் சுட்​ட​தில் மூன்று எஃப்​-15இ ரக விமானங்​கள் விழுந்து நொறுங்​கின.

ஈராக் வான்​பரப்​பில் இரண்டு எரிபொருள் நிரப்​பும் விமானங்​கள் மோதிக்​கொண்​ட​தில் ஆறு வீரர்​கள் உயிரிழந்​தனர். சவுதி அரேபி​யா​வில் உள்ள இளவரசர் சுல்​தான் விமானப்​படை தளத்​தின் மீது ஈரான் நடத்​திய ஏவு​கணைத் தாக்​குதலில், ஐந்து கேசி-135 ரக விமானங்​கள் சேதமடைந்து தற்​போது பழுது​பார்க்​கப்​பட்டு வரு​கின்​றன.

இது தவிர, சுமார் 12-க்​கும் மேற்​பட்ட அதிநவீன ‘எம்​.கியூ-9 ரீப்​பர்' வகை ஆளில்லா உளவு விமானங்​கள் சுட்டு வீழ்த்​தப்​பட்​டுள்​ளன. சவூதி அரேபி​யா, கட்டார் மற்​றும் ஜோர்​டான் ஆகிய நாடு​களில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்​களில் வைக்​கப்​பட்​டுள்ள ரேடார் அமைப்​பு​களும் ஈரானின் தாக்​குதலுக்கு உள்​ளாகி​யுள்​ளன.

கிரீஸ் நாட்​டின் சூடா விரி​கு​டா​வில் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள அமெரிக்​கா​வின் பிரம்​மாண்​ட​மான ‘யு.எஸ்.​எஸ். ஜெரால்ட் ஆர். ஃபோர்​டு' போர்க்​கப்​பலிலும் தீ விபத்து ஏற்​பட்​டுள்​ளது. இதன் மூலம், 3 பில்​லியன் டொலர் மதிப்​பிலான அமெரிக்க இராணுவ சொத்​துகள் பலத்த சேதத்தை சந்​தித்​துள்​ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .