R.Tharaniya / 2025 ஜூன் 15 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு பிராந்திய முன்னணி மற்றும் மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களின் கோல்ட் மைன்ட் கிரிகெட் கழகத்தினருக்கு புதிய சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பனவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு மருதமுனை பிரதான வீதி முஸ்தபா ட்ரேட் காம்ப்ளக்சில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகரும், ஓய்வுநிலை மாவட்ட காணி பதிவாளருமான முஸத்திக் ஜே முஹம்மட், கழக நிறைவேற்று பணிப்பாளர் ஆசிரியர் எம்.பி.எம்.ரசீட், கழக செயலாளர் அதிபர் எம்.சி.ஏ.நஸார், பொருளாளர் ஏ.எம். றியாஸ் ஆசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர் எஸ்.எம். துபைஸ், ஆர்.எம்.றிஸாப், அணித் தலைவர் ஜே.எம்.சாதிர், கிங்ஸ் லெவன் அணியின் செயலாளர் இசட்.எம். ஹுசைன், மற்றும் அணியின் சிரேஷ்ட வீரர்களும் கலந்து கொண்டனர்.


நூருல் ஹுதா உமர்
43 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
45 minute ago
1 hours ago