R.Tharaniya / 2025 நவம்பர் 02 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா, சீனதைபேயின் ஜோனா கார்லேண்டு மோதினர். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய ஜோனா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 56 நிமிடம் நடந்த போட்டியில் ஜோனா, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், சுலோவாகியாவின் மியா போஹன்கோவா மோதினர். அபாரமாக ஆடிய ஜானிஸ் டிஜென் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago