Shanmugan Murugavel / 2016 ஜூலை 15 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம், தமது மைதானத்தில் நடாத்தும் வட மாகாண வல்லவன் தொடரின் சுப்பர் 8 சுற்றுக்கு இறுதி அணியாக மன்னார் சென். லூசியஸ் விளையாட்டுக் கழகம் நுழைந்துள்ளது.
சென். லூசியஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் இளவாலை யங்கென்றீசியன் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான நான்காவது சுற்றுப் போட்டியொன்றில் 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற சென். லூசியஸ், இறுதி அணியாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இப்போட்டியின் 13ஆவது நிமிடத்தில் சென்.லூசியஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராங்கிளின் முதலாவது கோலினைப் பெற்று தனது அணிக்கு முன்னிலையை வழங்க, 31ஆவது நிமிடத்தில் அவ்வணியின் யூலி ஒரு கோலினைப் பெற்று 2-0 என்ற கோல் முன்னிலையை தனது அணிக்கு வழங்கினார்.
தொடர்ந்த இரண்டாவது பாதி ஆட்டத்தில் சென்.லூசியஸ் அணிக்கு கிடைக்கப்பெற்ற பெனால்டியை யங்கென்றீசியன் கோல்காப்பாளர் இலாவகமாக தடுக்க, தொடர்ந்த 79 ஆவது நிமிடத்தில் சென்.லூசியஸ் அணியின் அசோக் ஒரு கோலினைப் பெற்று, தனது அணிக்கு 3-0 என்ற கோல்கணக்கில் உறுதியான முன்னிலையை வழங்க, பல கோல் வாய்ப்புகளை தவறவிட்ட யங்கென்றீசியன் அணி, 84ஆவது நிமிடத்தில் செந்தூரன் மூலம் பெற்றுக் கொண்ட ஆறுதல் கோலுடன், இறுதியாக 1-3 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக சென்.லூசியஸ் அணி வீரர் அசோக் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கான பணப்பரிசு மற்றும் பதக்கத்தினை பிரதம குடிவரவு உத்தியோகத்தர் மற்றும் சட்டத்தரணியான சி.ஸ்ரீஸ்கந்தராசா வழங்கி கெளரவித்தார்.
5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025