Freelancer / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி சாம்பியனாகியுள்ளது.
இப்போட்டி நேற்று (09) திங்கட்கிழமை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் குருநாகல் கவுசிகம மத்திய கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனா 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. மகாஜனா முதல்பாதி ஆட்டத்தில் 1 கோலையும் இரண்டாவதுபாதி ஆட்டத்தில் 2 கோல்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பு.கஜிந்தன்




19 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
1 hours ago
1 hours ago