2025 ஒக்டோபர் 05, ஞாயிற்றுக்கிழமை

தேசியத்தில் காரைதீவு பிரதேச செயலக அணி

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

தேசிய மட்ட இளைஞர் கழக வலைப்பந்தாட்டப் போட்டிக்கு காரைதீவு பிரதேச செயலக அணி தெரிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்ட இளைஞர் கழக வலைப்பந்தாட்டப் போட்டியில் சம்பியனான நிலையிலேயே காரைதீவு பிரதேச செயலக அணி தேசியத்துக்குத் தெரிவாகியுள்ளது.

அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் அட்டாளைச்சேனை அணியை வென்றே காரைதீவு சம்பியனாகியிருந்தது.

காரைதீவு பிரதேசத்தை இராமகிருஷ்ணா இளைஞர் கழக அணியே பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X