Shanmugan Murugavel / 2025 ஜூலை 22 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஸாகிர்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக் கிடையில் நடைபெற்ற பூப்பந்தாட்டத்தில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் 20 வயதுக்குட்பட்டடோர் சம்பியனாகி தேசிய மட்டத்துக்குத் தெரிவாகினர்.

அத்துடன் சாஹிராவின் 18 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோர் இரண்டாமிடங்களைப் பெற்று தேசிய மட்டத்துக்குத் தெரிவாகினர்.

சாதித்த மாணவரை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர்களான ஏ.எம். அப்ராஜ் றிழா, எம்.எச்.எம். முதன்ஸிர் ஆகியோருக்கு மாகாண மட்டத்தில் சிறப்பாக விளையாடியது போன்று தேசிய மட்டத்திலும் வெற்றிபெற வேண்டுமென கல்லூரியின் அதிபர் எம்.ஐ. ஜாபீர் உட்பட பிரதி அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர் சங்கத்தினர் சார்பான பாடசாலை சமூகம் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.
18 minute ago
26 minute ago
29 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
29 minute ago
31 minute ago