Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
சம்மாந்துறை ஜூனைற்றி விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் சம்மாந்துறை லைட்னிங் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவானது.
அணிக்கு 7 பேரைக் கொண்ட 5 ஒவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி, சம்மாந்துறை அல்-அர்சாத் முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் புதன்கிழமை (17) நடைபெற்றது.
ஜூனைற்றி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம்.ஆஷிக் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய ரியல்நஜா விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, 5 ஒவர்கள் நிறைவில் 4 விக்கட்களை இழந்து 40 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லைட்னிங் விளையாட்டுக் கழகம் 4.1 ஒவர்கள் நிறைவில் குறித்த இலக்கையடைந்து 6 விக்கெட்களால் வெற்றியை தனதாக்கி கொண்டது.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், மாஹிர் பவுண்டேசன் தலைவர் வை.வீ.சலீம், அல்-அர்சாத் முஸ்லிம் வித்தியாலய பழைய மாணவரும் மாஹிர் பவுண்டேசன் அலுவலக இணைப்பாளருமான எம்.ஜெ.எம்.இர்பான், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வெற்றியீட்டிய கழகத்துக்கான சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தனர்.


1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago