Janu / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 24 கோடியே 30 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கைன் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் சுங்கப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த சேர்ந்த 59 வயதுடைய ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மிக சூட்சுமமான முறையில் இதனை நாட்டிற்கு கொண்டுவந்துள்ளதுடன் அவரிடம் இருந்து 4 கிலோ 855 கிராம் கொக்கைன் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதியுடன் சந்தேக நபரான பயணியும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026