Freelancer / 2025 மே 08 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ. ஜயசுந்தரவின் சேவைக்காலம் 6 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து குறித்த பதவிக்கு தற்போது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைய இந்த நியமனத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. R
07 May 2026
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
07 May 2026
07 May 2026