2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

வௌ்ளிவிழா மலர் அறிமுகம்

Editorial   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


 
இலங்கையில் இனிய நந்தவனம் வெள்ளிவிழா மலர் அறிமுகம், கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப் பிள்ளை மண்டபத்தில், செப்டெம்பர் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.

‘ஞானம்’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெறும் இந்த அறிமுக விழாவில், இலக்கிய புரவலர் அல்ஹாஜ் ஹாசிம் உமர் முன்னிலை வகிப்பார். சிறப்பு அதிதியாக தமிழகம் திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் அல்ஹாஜ் முகமது அபுபக்கர் சித்திக் பங்கேற்பார்.

இந்த மலர் அறிமுக விழாவில் பங்கேற்குமாறு இனிய நந்தவனம் இலங்கை வாசகர் வட்டம், அழைப்பு விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X