Suganthini Ratnam / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை, ரமேஸின் இயக்கத்தில் உருவான உணர்வுகள் குறுந்திரைப்பட வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது உணர்வுகள் குறுந்திரைப்பட இறுவெட்டு வெளியீடும் நடனம், பாடல் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற்றன. அத்துடன், திருகோணமலை சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.அச்சுதனினால் உணர்வுகள் குறுந்திரைப்பட கண்ணோட்டமும் நிகழ்த்தப்படவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கமும் கௌரவ விருந்தினராக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ச.சுதாகரனும் சிறப்பு விருந்தினராக சிரேஷ்;ட சட்டத்தரணி ஆ.ஜெகஜோதியும் கலந்துகொள்ளவுள்ளனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago