Sudharshini / 2016 மார்ச் 12 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பிரதேச கலை, இலக்கிய கலாசார விழா, காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (11)நடைபெற்றது.
இந்நிகழ்வில், 'ஸம் ஸம்' என்ற சிறப்பு மலர் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் காத்தான்குடியைச் சேர்;ந்த ஆறு கலைஞர்;களும் கௌரவிக்கப்பட்டனர்;.
காத்தான்குடி பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர்; எஸ்.எச்.முஸம்மில் தiமையில் நடைபெற்ற இவ்விழாவில், மீள்குடியேற்ற புனர்;வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்;.
2015ஆம் ஆண்டு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவுக்குள் நடத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
7 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Feb 2026