Gavitha / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எல்.லாபீர்
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் யாழ். முஸ்லிம் கலாசார நிகழ்வும் ஒன்றுகூடலும் எதிர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஒஸ்மானியக் கல்லூரியில், வடமாகாண சபை உறுப்பினர் அயுப் அஸ்மின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் இறுதிநாளான 26ஆம் திகதி சனிக்கிழமை மாலை, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட நூல் வெளியீட்டாளர்களுக்கும் எழுத்து, கலைத்துறையில் சேவையாற்றியவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா இந்த விருதுகளை வழங்கவுள்ளார்.
மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்வுகள் என்பனவும் இதன்போது நடைபெறவுள்ளன.
20 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago