Kogilavani / 2015 மே 28 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணகியம்மனைப் பற்றிய கும்மிப்பாடல் அடங்கிய இறுவட்டு வெளியீடு, புதன்கிழமை (27) மாலை களுவாஞ்சிகுடி கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலனசைபத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாககாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாள் எம்.கோபாலரெத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இறுவட்டின் முதல் பிரதியை களுவாஞ்சிகுடி முகாமை ஆலைய பரிபாலனசைபத் தலைவர் அ.கந்தவேளிடமிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாககாண சபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை பெற்றுகொண்டார்.
இவ் இறுவட்டின் பாடல் வரிகளை வைத்தியக் கலாநிதி ப.சதீஸ்குமார் இயற்றியுள்ளதுடன் சிவத்திரு.தரிஷனன் குருக்கள் பாடல் பாடியுள்ளார்.
இதற்கான இசையமைப்பை அ.செல்வக்குமார் வழங்கியுள்ளார்.



40 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
43 minute ago
52 minute ago