2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு

Freelancer   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ. சக்தி         

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (10) மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள அமைப்பின் காரியாலயத்தில், மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.சு கதிர்காமத்தம்பி அரங்கில் நடைபெற்றது. 
இதன்போது, புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது. 

தலைவராக எல்.தேவஅதிரனும் செயலாளராக வ. சக்திவேலும் பொருளாராக எஸ். வரதராஜனும் உபதலைவராக ரி.எல் ஜௌபர்கானும் உபசெயலாளராக எம்.ஏ.சி.எம் ஜெலீஸூம் கணக்காய்வாளராக எஸ். தவபாலரெட்ணமும் தெரிவு செய்யப்பட்டனர். 

நிர்வாக சபை உறுப்பினர்களாக சு. துஷியந்தன், சு. கமலேஸ்வரன், க. ஜெகதீஸ்வரன், ஜே.எவ் காமிலாபேகம், வி. பத்மசிறி, எம்.எச்.எம் அன்வர், எம். துதிகரன், வ. துசாந்தன், எஸ். மயூரப்பிரியன், எல். சஜித், எம்.எஸ்.எம். நூர்தீன், எஸ்.ச தீஸ்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .