2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கல்முனையில் 7 நாள்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

 

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசர திருத்த வேலை காரணமாக, காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை மின் துண்டிக்கப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய, நாளை மறுதினம் (09),  நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் மின் தடைப்படும்.

இதேவேளை, வெள்ளிக்கிழமை (10), சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மல்கம்பிட்டி வீதி,புளக் கிழக்கு மலையடிக்கிராமம், கல்லரிச்சல் ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

திங்கட்கிழமை (13), கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய  மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட அம்மன் கோவில், உடையார் வீதி, வி.வி வீதி,இஸ்லாமாவாத் வீட்டுத் திட்டம், பாலமுனை, சின்னப்பாலமுனை, அட்டாளைச்சேனை, தரவைக் கோவில், கடற்கரைப்பள்ளி, கடற்கரை ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

செவ்வாய்க்கிழமை (14), நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்;குட்பட்ட சின்னப்பாலமுனை மற்றும் கோணாவத்தை, உடங்கா, அம்பாறை வீதி, ஹிலால் புரம் ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

புதன்கிழமை (15), சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மாவடிப்பள்ளி, வைத்தியசாலை ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

வெள்ளிக்கிழமை (17), கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின் தடைப்படும்.

சனிக்கிழமை (18), நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம், அல் அர்சாத் பாடசாலை பகுதி, மாவடிக் கிராமம் ஆகிய பகுதிகளில் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .