2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘தண்ணீருக்கு எத்தனை கண்கள்’

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கவிஞர் சோலைக்கிளி எழுதிய 'தண்ணீருக்கு எத்தனை கண்கள்' நூல் அறிமுக விழா சனிக்கிழமை (17)  கல்முனை  தனியார்  மண்டபத்தில் அருந்தந்தை அன்புராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு, கவிதை நூலை வெளியீட்டு வைத்தார்கள். 

கலாபூசணம் பாலமுனை பாறூக், எழுத்தாளர் எஸ்.எல்.மன்சூர், கவிஞர்களான உமாவரதராஜன், அக்கரையூர் அப்துல் குத்தூஸ் ஆகியோர் இலக்கிய சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர். எழுத்தாளர்களான எம். அப்துல் றஸ்ஸாக், பேராசிரியர் எஸ்.எம் ஐயூப் ஆகியோர் நூல் மீதான உரையை நிகழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .