2025 ஜூன் 25, புதன்கிழமை

தமிழரின் பண்பாடுகளை பேண வேண்டிய பொறுப்பு பாடசாலைக்கு உள்ளது

Freelancer   / 2023 ஜனவரி 24 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி சகாதேவராஜா

 தமிழரின் பண்பாடு, பாரம்பரியம், அடையாளம் போன்றவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டிய பொறுப்பு, அவர்கள் சார்ந்த பாடசாலைகளுக்கும் உள்ளது என்று கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியின் அதிபர் சகோ. சந்தியாகு செபமாலை தெரிவித்தார்.
பற்றிமா கல்லூரியின் தைப்பொங்கல் திருவிழா,  பாரம்பரிய முறைப்படி  சிறப்பாக நடைபெற்றது.  மாட்டு வண்டிலில் பொங்கலுக்கு உரிய பொருட்கள் அனைத்தும் பற்றிமா பெண்கள் பிரிவிலிருந்து ஊர்வலமாக ஆண்கள் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டது.

 அங்கு புதுப்பானையில் புத்தரிசி கொண்டு பொங்கல் இடம் பெற்றது. அதிபர் சகோ. சந்தியா அடிகளாருக்கு தலைப்பாகை கட்டி, பொங்கல் பானைக்கு பால் ஊற்றினார்கள். சிறப்பு அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் மின்சார சபை பொறியாளர் வி.ரி சம்பந்தர் கலந்து சிறப்பித்தார்.

அங்கு அதிபர் சந்தியாகு மேலும் பேசுகையில், இன்று தமிழர்களின் உடை என்ன, அவர்களின் பாரம்பரியம் என்ன என்பது தெரியாமல் பலர் இருக்கின்றார்கள். அதேபோன்று, தைப்பொங்கலின் முக்கியத்துவம் என்ன, அதன் பாரம்பரியம் என்ன என்பது தொடர்பாக எதிர்கால சந்ததிக்கு அதனை முறைப்படி எடுத்துக்காட்டாக புரிந்துகொள்ளும்படி நடந்துகொள்ள வேண்டும். இதில் கணிசமான பங்கு பாடசாலைகளுக்கும் உண்டு என்றார்.
விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .