2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பள்ளிவாசல் கூட்டத்தில் கைகலப்பு ஒருவர் பலி: மூவர் கைது

Freelancer   / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பள்ளிவாசல் ஒன்றின்  நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை  கூட்டம்   ஒன்றின் பின் இடம்பெற்ற சச்சரவில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (7) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செந்நெல் கிராமம் -2 பகுதியில் அமைந்துள்ள  மஜ்ஜிதுல் முனீர்  பள்ளிவாசல் முன்றலில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது குறித்த  கூட்டத்தில் பங்குபற்றியவர்களில் சிலர் எதிர்வரும் நோன்பு  பெரு நாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதுடன் மற்றுமொரு  குழுவினர்  சில  தினங்களில் புதிய நிர்வாகம்  தெரிவு செய்ய பட வேண்டுமென  தெரிவித்திருந்தனர்.இதனை அடுத்து  எதிர்வரும்  ஞாயற்றுக்கிழமை புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ய தீர்மானித்த நிலையில் குறித்த கூட்டம் நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில் கூட்டத்தை நிறைவு செய்து திரும்பியவர்கள் இரு குழுக்களாக பிரிந்த  மோதலில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இம் மோதல் சம்பவத்தில்  65 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறை  மலையடி கிராமம் கிராம சேவையாளர் பிரிவு 4  பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி  பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய    மூவரை கைது செய்து மேலதிக விசாரணையை  மேற்கொண்டு வருகின்றனர்.

                                                                                                                                     பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .