Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ. சக்தி
மனித உரிமைகளை இலங்கை மதிக்காத வரைக்கும், பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை, தெற்கில் உள்ள மக்களும் ஆட்சியாளர்களும் உங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு வலிந்துகாணாமல் போன உறவுகளின் சங்கங்கள் நீதிகோரி, கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையிலான ஆர்ப்பாட்ட பேரணியை சனிக்கிழமை (10) நடத்தியிருந்தன. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கூறியதாவது,
மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இலங்கை மாறாதவரைக்கும், இந்த நாட்டுக்கு எந்தவோர் எதிர்காலமும் இல்லை. மனிதனுக்கே மதிப்பில்லை என்றால், அவ்வாறான நாடு எவ்வாறு ஒரு ஜனநாயக வழியில், பொருளாதார வழியில் அபிவிருத்தியடைய முடியும்?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இந்தத் தாய்மார், களைத்து போய் காலப்போக்கில் இந்தப் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என எவராவது நினைத்தால், பிழையானதை நம்பியிருக்கின்றீர்கள்.
ஏன் என்றால், இந்த தாய்மார்கள் அடுத்த தலைமுறையிடம் இந்தப் போராட்டத்தை ஒப்படைத்துள்ளனர். நாங்கள் களைத்துப் போகமாட்டோம்; எங்களது அரசியல் உரிமைகளுக்காகவும் மனித உரிமைகள் மீறல்களுக்காகவும் நீதி கிடைக்கும் வரைக்கும், எந்தனை தலைமுறை எடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்.
சிங்கள மக்களுக்கு எதிராக நாங்கள் போராடவில்லை; சிங்கள மக்களால் தெரிவு செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தான் நாங்கள் போராடுகிறோம். எங்களுடைய மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதிவேண்டும்; இந்த நாட்டில் சமத்துவமான அரசியல் உரிமை வேண்டும் என்றுதான் போராடுகின்றோமே தவிர, சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago