2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மாடு மேய்க்கச் சென்றவர் நீரில் மூழ்கி மரணம்

Janu   / 2024 ஜூன் 10 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்னை பகுதியில்,  நீரில் மூழ்கிய நிலையில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (10) இடம்பெற்றுள்ளது .

ரிதிதென்னை புதிய கிராமம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சாலி முகம்மது றிஹாஸ் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . 

குறித்த இளைஞன் ரிதிதென்னை குளத்திற்கு அருகில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போதே குளக்கட்டில் சறுக்கி விழுந்து நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் தெரிய வந்துள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .