2025 ஜூன் 25, புதன்கிழமை

மாணவர்களுக்கு பாதணிகளும் சாதனையாளர் கௌரவிப்பும்

Freelancer   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

டார்க்  பவுண்டேஷனின் பூரண அனுசரணையில் 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கல்முனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட 28 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 350 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களின் கௌரவிப்பும் டார்க்  பவுண்டேஷனின் தவிசாளர் டொக்டர் எம்.ஜே.கே.எம்  அர்ஷத் காரியப்பர் தலைமையில் டார்க்  பவுண்டேஷனின் பொது செயலாளர் ஊடகவியலாளரும், அல்- மீசான் பவுண்டேஷன் தலைவருமான நூறுல்ஹுதா உமரின் ஒருங்கமைப்பில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நேற்று முன்தினம் (19) நடை பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சகுதுல் நஜீம், கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எல்.எம் றிபாஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம் எம் ஆஷிக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர்களான நஸ்மியா சனூஸ், யு.எல் சாஜித், கோட்டக்கல்வி அதிகாரி வீ.எம் ஸம்ஸம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஆரிகா காரியப்பர், கல்முனை சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சாரிக் காரியப்பர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் பஸ்மீர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .