2025 ஜூன் 25, புதன்கிழமை

மாணவியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்

Freelancer   / 2023 ஜனவரி 12 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப். முபாரக்  

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை  துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.

கந்தளாய் கோவில் கிராமத்தைச்  சேர்ந்த 65 வயதுடையவர், ஒன்பதாம் தர மாணவியை, பணம் தருவதாகக் கூறி துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, மருத்துவ அறிக்கைக்காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக சிறுமி உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து, உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .