Janu / 2024 மார்ச் 18 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுக்திய போதையொழிப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போது 735 மதன மோதக காம லேகிய பக்கெட்டுகளுடன் 35 வயதுடைய நபரொருவர் டெலிகொம் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது .
புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றிக்கமைய , குறித்த
சந்தேக நபரை வாகனங்களின் டயர்களுக்கு பஞ்சர் போடும் வாகன மொன்றில் போதை லேகியம் எடுத்து வரும் போதே கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 735 லேகிய பக்கெட்டுகள் மற்றும் வாகனமொன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை கடந்த இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஐஸ் மற்றும் ஹெரோயின், கேரளா கஞ்சாவுடன் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .
ரீ.எல்.ஜவ்பர்கான்


51 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
01 May 2026