Freelancer / 2024 ஏப்ரல் 14 , பி.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிவேக நெடுஞ்சாலைகளின் போக்குவரத்து 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலையின் செயற்பாட்டு மற்றும் பராமரிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்று முன்தினம் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளில் 128,000 வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன என அந்த பிரிவின் பணிப்பாளர் ஆர்.ஐ.டீ. கஹடபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதனூடாக 4 கோடியே 44 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 10ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 15 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
5 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
07 Mar 2026