2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

யாழ். எம்.பி அர்ச்சுனாவுக்கு பிணை

Editorial   / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துப்பாக்கியைக் காண்பித்து பெண் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 27-ஆம் திகதி இளவாலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நிலையில் பெண்ணொருவரை அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இன்று (29) இவ்வழக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவரை இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .