2026 மார்ச் 21, சனிக்கிழமை

’விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் உறுமய’

Freelancer   / 2024 ஜூன் 18 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணி உறுதிகள் இல்லாமல் நாட்டு மக்களுக்கு சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மகாவலி வளவ வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 45 ஆயிரத்து 253 பேரில் 1,524 பேருக்கு, அம்பிலிபிட்டி மகாவலி விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற காணி உறுதி வழங்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை நாம் பொறுப்பேற்ற வேளையில் எரிபொருள், மருந்து, உணவுத் தட்டுப்பாடு காணப்பட்டது. 2022 – 2023 சிறுபோகத்தில் விளைச்சல் அதிகரித்தது. அதனால் கடவுள் செயலால் இதனைச் செய்ய முடியும் என்று நம்பினோம். விவசாயிகளே அதற்குப் பக்கலமாக நின்றனர். இப்போது விவசாயிகளுக்கான உரம் உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முன்னெடுப்புக்களை ஆரம்பித்துள்ளோம்.

விவசாயிகளுக்காக நாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் இத்தோடு நின்றுவிடாது. காணிகளை வழங்குவது மாத்திரம் போதுமானதல்ல. கிராமங்களில் வறுமையை ஒழிக்க விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே விவசாய நவீனமயப்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. காணி உரிமை கிடைப்பதால் மக்கள் தமது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும்.

நீங்கள் அனைவரும் அந்த வேலைத்திட்டத்தின் பங்குதாரர்கள் ஆக வேண்டும். அதற்குத் தேவையான நிதி அடுத்த வருடத்திலிருந்து வழங்கப்படும். வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கிறோம். அதனால் விவசாய சேவை நிலையங்களை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. காணி உரிமையின்றி 3 பரம்பரைகளாக சேவையாற்றிய விவசாய மக்களுக்கு நன்றி என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .