A.P.Mathan / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் இடையே மீண்டும் "வார்த்தை யுத்தம்" தொடங்கியிருக்கிறது. அதனையொட்டி இரு கட்சிகளுக்குள்ளும் மேடைப் பேச்சுகள் தீவிரமாகியிருக்கின்றன. திருச்சி அருகில் உள்ள திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் வருடந்தோறும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா. திருவரங்கத்தில்தான் அந்த வார்த்தை யுத்தத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. திருவரங்கத்திற்கும் இலங்கைக்கும் எப்போதும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று தமிழகத்தில் பேசுவார்கள். அதேபோல் இந்த முறை இலங்கைத் தமிழர் பிரச்சினையை மையப்படுத்தித்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா அங்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது கண்டனக் கணைகளைத் தொடுத்தார். அன்னதான திட்டம் தொடக்கி வைக்கப்பட்ட பிறகு நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க்குற்றம் நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐ.நா.சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் எனவும், இலங்கை தமிழர்கள் கண்ணியமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்கும் வரை மற்ற நாடுகளுடன் சேர்ந்து இலங்கையில் பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன்" என்றெல்லாம் இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பற்றி விளக்கிப் பேசிவிட்டு, "தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழிய காரணமாயிருந்தவர், இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுப்பதுபோல் நாடகமாடுகிறார்" என்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடினார். அதைவிட குறிப்பாக இந்த பிரச்சினையில் மத்திய அரசை(இந்திய அரசு) எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர் இலங்கை தமிழர்களுக்காக என்று கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றி விட்டார் என்றும் குற்றம் சாட்டினார். சமீபத்தில் தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டிற்கு கடைசியில் மத்திய அரசு கொடுத்த கெடுபிடி காரணமாக அந்தப் பெயரை "ஈழத்தமிழர்கள் வாழ்வுரிமை மாநாடு" என்று மாற்றியதைத்தான் முதல்வர் ஜெயலலிதா அப்படி திருவரங்கம் கூட்டத்தில் இடித்துரைத்தார்.1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago