2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

மீன்பிடிக் களத்தை குழப்புதல்

Super User   / 2011 பெப்ரவரி 09 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-என்.சத்தியமூர்த்தி

தமிழ்நாட்டு மீனவர்கள் இருவர் நடுக்கடலில் கொல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள மகாபோதி சங்கத்திலிருந்த பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை பற்றி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டுகின்றன.

இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கும், தமிழ்நாட்டில மாநில அவைகளுக்கும் தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்த வேளையில், இந்த சம்பவங்கள்பற்றி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தலின் அவசியத்தை இவை கோடிட்டு காட்டியுள்ளன.

ஒரு நாட்டுக்குள்ளே அருகருகே வசிக்கும் மீனவ சமூகங்களிலும் மீன்பிடி உரிமை ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. நவீன அரசு பற்றிய கருத்தில் இறைமை, கடல், ஆள்புலம் ஆகிய எண்ணக்கருக்கள் சேர்ந்துள்ளன. இருந்தாலும் சர்வதேச சட்டங்கள் எல்லை வகுத்தலையும் பிரித்துவிடுதலையும் பற்றி சங்கடப்படுகின்றன. எந்த ஒரு தீர்வும் சடத்துக்குள் அமைய வேண்டும், அடிநிலை யதார்த்தத்தை கருத்தில் எடுக்க வேண்டும்.

இலங்கை - இந்தியாவுக்கிடையிலான மீன்பிடித் தகராறு இனப் போராட்டத்திற்கு முன்னரே காணப்பட்டபோதும், கடல்புலிகளின் வருகை புதிய பரிமாணம் ஒன்றை சேர்த்திருந்தது.

 கடற்புலிகள் இருந்த வேளையில் 2008 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட இருபக்க ஒப்பந்தம் சண்டை முடிந்த நிலையில் பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையை இப்போதும் வழங்குகிறது. கடற்புலிகள் சகாப்தத்திற்கு உரித்தான, பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் இப்போது பொருத்தமானவை அல்ல. இந்த அச்சங்கள் தற்போது உறவுகள் சீரடைந்துள்ள நிலைமையில் பாதகமான விளைவுகளை தரக்கூடியன.

நியாயப்படுத்த முடியாத பலவந்தப் பிரயோகம், இலங்கை கடற்படையால் மீனவர் கொல்லப்பட்டமை என்ற குற்றச்சாட்டுதல்களோடு இது நின்றுவிடவில்லை. இதுவே 1974 ஆம் ஆண்டில் இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கச்சதீவை மீளப்பெறவேண்டும் என்று தொடர்ந்து கருத்துகள் முனைப்படி பெறுவதற்கும் காரணமாகவுள்ளது. இந்திய கருத்து எவ்வாறு இருப்பினும் இந்த பிரச்சினை இந்திய உயர்நீதிமன்றத்தில் உள்ளது.

இலங்கையில் வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றிய வழக்கில் இது தொடர்பான இருபக்க ஒப்பந்தத்துக்கு மேலாக வடக்கு-கிழக்கு இணைப்பு யாப்புக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரச்சினையில் இது முன்னுதாரணமாக காட்டப்படுகிறது.

இந்திய மீனவர்கள் அணி அணியாக வந்து இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள படகுகள், வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக இலங்கை குற்றம் சாட்டுவதில் உண்மையுள்ளது. சட்டத்தை அமுலாக்குவதில் எண்ணிக்கை ஒரு தடையாகக் கூடாது. தௌ;ளை  ஒழிப்பதற்காக வீட்டின் மீது குண்டு வீச்சு நடத்த முடியாது. இலங்கை மீனவருக்கு பயன்படுத்தும் சட்டங்களையே இந்திய மீனவர் குற்றமிழைத்தாலும் பயன்படுத்த வேண்டும்.

நுணுக்கமான விபரங்களை தள்ளிவிட்டுப் பார்த்தால், இது இலங்கை மீனவர்களின் (அநேகமாக தமிழர்கள்) மீன்பிடி உரிமையை மறுப்பதாகும். இதனால் அவர்களின் ஜீவனோபாயத்தை மறுப்பதாகும்.

இலங்கை மீனவர்கள் தமது துன்பத்தையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கிவிட்டனர். இந்தி படகுகளால் அவர்கள் வலைகள் சேதப்படல் உட்பட பல பிரச்சினைகள் அவர்களுக்கு உண்டு. போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் 'கடல்புலிகள்' இதை அழுத்தும் வகையில் கூறினர். அவர்களும்; இந்திய படகுகள், மீனவர்களை தடுத்து வைத்தனர்.

தற்போது முன்னேற்றமான நிலைமை காணப்படும் சூழலில் இரண்டு நாட்டு மீனவர்களுக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்;வு காணமுடியும். இது, அடி நிலைபற்றிய விளக்கத்துடன் பேசித் தீர்க்கப்பட வேண்டும்.

மீன்பிடி களங்கள் மீது இலங்கை மீனவர்களுக்குள்ள சட்டத்தாலும் பாரம்பரியத்தாலும் உண்டான உரிமை, மீன் வளங்கள் மீது இந்திய மீனவர்களின் கோரிக்கை என்பன நீதியாக ஆராயப்பட வேண்டும்.

உண்மையான பிரச்சினைகள் வெளிவர அனுமதிக்கப்பட வேண்டும், அவை இனங்காணப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.

இறைமை, ஆட்புல பூரணத்துவம் பாதுகாப்பு, எல்லை மீறுதல் போன்ற சாதாரணமாக விளங்கமுடியாத விடயங்களுக்கு அப்பால், மீன்பிடித்தல் மற்றும் மீனவர் தொடர்பான உடன்படி பிரச்சினைகளை இலங்கை பிரித்தெடுக்க வேண்டும்.

இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையை, சகல மட்டத்திலும் கட்டியெழுப்ப வேண்டும். எட்டப்பட்ட தீர்வுகளை சரியாக நடைமுறைப்படுத்தவென இந்திய ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டு நாடுகளும் சென்னையில் நடந்த மகாபோதி பிரச்சினையை மீனவர் பிரச்சினைக்கு புறம்பாக பார்;க்க வேண்டும். மீன்பிடி பிரச்சினை இன்றியே, மகாபோதி பிரச்சினை கொழும்பு கூறுவது போல இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவை சீரழிக்க முயலும் கட்புலனாகாத சக்திகளின் வேலையாக இருக்கமுடியும்.

இருபக்க உறவை கெடுக்க முயலும் குழப்பக்காரர்கள் பற்றிய இலங்கையின் பயம் நியாயமானது என்பதை மகாபோதியிலேயே காணமுடியும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .