Super User / 2012 ஏப்ரல் 29 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தற்தோதைய நடவடிக்கைகளை பார்க்கும்போது அக்கட்சியின் உறுப்பினர்களுக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. அக்கட்சியின் சில தலைவர்களின் நடவடிக்கைகளை நினைக்கும் போது ஏன் தான் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே முடியாமல் இருக்கிறது.
மே தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதனால் பிரேமதாச ஞாபகார்தத்திற்கு எவ்வித தடையும் ஏற்படக் போவதில்லை. அதனை வேண்டும் என்றால் யாழ்ப்பாணத்திலும் நடத்தலாம். அதே போல் இரண்டு நிகழ்ச்சிகளையும் வேண்டும் என்றால் இரண்டு இடங்களிலும் நடத்தலாம். அனால் இங்கே தலைமைத்துவ போராட்டத்தின் காரணமாக இதுவும் இன்று பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
ஆனால் காலப் போக்கில் தொழிலாளர்களை திசை திருப்புவதற்காகவும் குழப்புவதற்காகவும் முதலாளித்துவ கட்சிகளும் மே தினத்தை கொண்டாட ஆரம்பித்தன. அக் கட்சிகளிடம் கூடுதல் பண வசதி இருப்பதன் காரணமாகவும் ஊடக ஆதரவு இருப்பதன் காரணமாகவும் தொழிலாளர் வர்க்க மே தினக் கொண்டாட்டங்களை விட அக் கட்சிகளின் மெ தினக் கொணடாட்டங்கள் பொது மக்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் மே தின நிகழ்ச்சிகள் இதற்கு விதி விலக்காகும்.2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago