A.P.Mathan / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
"2-ஜி அலைக்கற்றை" ஊழலைத் தொடர்ந்து புதிதாக முளைத்திருக்கிறது "கோல்கேட்" முறைகேடு. ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்று இந்திய தலைமை கணக்காயர் கொடுத்துள்ள ஒடிட் அறிக்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான "பிரசார அஜெண்டா" இப்போதே எதிர்க்கட்சிகளுக்கு "நிலக்கரி வடிவில்" கிடைத்தாகி விட்டது. பிரதமர் பதவிக்கான போட்டி தொடங்கி விட்டாலும், அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தெரியாமல் ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே அல்லல்படுகின்றன. ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அதற்கு மாற்றாக வர விரும்பும் பா.ஜ.க.விற்குமே இப்போதைக்கு யார் பிரதமர் வேட்பாளர் என்பது தெரியவில்லை. இரு கட்சிகளுமே தங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு போடப்பட்டுள்ள "மர்ம முடிச்சுகளை" அவிழ்க்க முடியாமல் தவிக்கின்றன. இந்த இரு அகில இந்தியக் கட்சிகளுக்கும் மாற்றாக வர நினைக்கும் மூன்றாவது அணியோ தலைமையேற்று நடத்துவதற்கு சரியான தலைமை கிடைக்காமல் தர்மசங்கடத்தில் மூழ்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆங்காங்கே உள்ள மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமே இதற்கு காரணமா? என்றால் அது மட்டும் அல்ல காரணம். காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் மூன்றாவது அணி ஆகியவற்றிற்குள் நடக்கும் "உள்குத்து அரசியல்" போன்றவைதான் முக்கிய காரணம்!30 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago