Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2013 ஜனவரி 14 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
mohan Monday, 14 January 2013 02:07 PM
ஐயா உங்கள் கருத்து ஒரு புதிய ஆரம்பம். நாங்கள் இனிமேலும் மதங்களின் பெயரால் தவறுகளை மூடி மறைக்காமல் மனச்சாட்சி படி செயல்படுவோம். சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, கருணை மேம்பட பாடுபடுவோம்
Reply : 0 0
நஜிமிலாஹி Monday, 14 January 2013 04:57 PM
ரிசானாவின் விடயம் பல படிப்பினைகளை உள்வாங்கியுள்ளது. பல வடிவங்களில் முஸ்லிம் சமூகத்தை சிந்திக்கவும், செயற்படவும் வைத்துள்ளது. எமது சமூகவியல் மற்றும் சட்டவியல் மறுவாசிப்பை எட்டியுள்ளது. இஸ்லாமிய சட்டத்துறை என்ற முகத்தை காட்டி தண்டனைகள் கேள்விக்குட்படுத்தும் விதமாக அமைவதும் அதனைப் பற்றி விவாதிப்பதை மறுக்கும் விடயமானது மேலும் இஸ்லாம் பற்றிய தவறான புரிதலையே ஏற்படுத்தும். எனவே, கருத்துக்களையும், சிந்தனைகளையும் இ்ஸ்லாம் வரவேற்றுள்ளதோடு அதற்கான சூழலையும் ஏற்படுத்தி கொடுக்கச் சொல்கின்றது.
Reply : 0 0
ariff Tuesday, 15 January 2013 04:17 AM
றிஸானா சம்பந்தமாகவும், இஸ்லாம் சம்பந்தமாகவும்,கொம்பு முளைத்த தற்கால அரபிகள் சம்பந்தமாகவும் கடந்த பல காலமாக உலகம் முழுக்க வந்து கொண்டிருக்கும் கட்டுரைகளில், உருப்படியான,தரமான ஒரே ஒரு கட்டுரை இதுதான். தமிழ் மிரர் இணையத்தளத்துக்கு முதலில் எனது நன்றிகள். கட்டுரையாளரை கட்டி இழுத்து வந்து, தொடர்ந்து எழுதி, இஸ்லாம் மீதான கறையை நீக்கி, அரபிகள் மீதான மாயையை அகற்ற வேண்டியது வாசகர்களின் பொறுப்பு.
Reply : 0 0
mansoor a. cader Tuesday, 15 January 2013 09:23 AM
ரிஸானாவின் துயரம் ஷரீஆ தொடர்பான மீள் வாசிப்பிக்களை நியாயப்படுத்தி இருக்கிறது. நமது அறிவாளிகள் “ரகத், விர்லாட்டுதல், கூட்டுப்பிரார்த்தனை, குனூத் ஓதுதல், தல்கீன் முதலிய' அறிவார்ந்த விடயங்களில் அடிபிடி படுவதை விட இப்படியான 'சில்லறை' விடயங்களுக்காக ஷஹீதானாலும் தப்பில்லை. ஒரு அறிவார்ந்த ஆரம்பம் கம்பீரத்துடன் தலை காட்டத் தொடங்யுள்ளது இப்போதைக்கு ஒரு ஆறுதல்தான்.
Reply : 0 0
Ahmed Rifth Tuesday, 15 January 2013 05:37 PM
ரிஸானா கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அதன் பின்புலத்தை அந்த வழக்கு நடந்த விதத்தை யாருமே இஸ்லாமிய மற்றும் சமூகவியல் கண்ணோட்டத்தில் ஆய்ந்து மக்களுக்கு சொல்லவில்லை என்ற ஆதங்கம் கடந்த தினங்களில் என் மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தது. மாஷால்லாஹ்! உங்கள் மூலம் அது தீர்ந்தது. ஜஸாகல்லாஹு ஹைரன்.
இதில் மிக மன வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், நாமெல்லாம் இன மத பேதமின்றி இந்த செய்தியை கேட்டு மிகவும் கவலையுற்றிருக்கும் இந்த நேரத்தில் ரிஸானா பிறந்த இடமான மூதூரில் ஜம்மியதுல் உலமா, பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஆகியவை எடுத்துள்ள முடிவில் இது முற்றிலும் ஷரியா சட்டத்துக்கு உட்பட்ட தீர்ப்பு என்றும் இதற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றளிக்கிறது.
சிறு பிள்ளைக்கும் தெரியும் அநியாயம் இவர்களின் கண்களுக்கு தெரியாமல் போனது எவ்வாறு? எங்கே இதனை விமர்சித்தால் சவூதியில் இருந்து வரும் காசு நின்றுவிடும் தமது வாழ்வாதாரம் வக்கற்று போய்விடும் எனப் பயந்தார்களோ என்னமோ..
Reply : 0 0
Mutabi3 Tuesday, 15 January 2013 06:28 PM
மன்னிக்க வேண்டும் மன்சூர் அவர்களே. சகோ. இத்ரீஸ் அவர்கள் இஸ்லாமிய ஷரீஆ பற்றி இன்னும் நிறைய விளங்க வேண்டி இருக்கிறது. கொலைக்குப் பழி வாங்குவதில் வாழ்க்கை இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் இதுபற்றி அலட்டிக் கொள்வது உங்கள் வேலை அல்ல என்று நான் நம்புகிறேன்
Reply : 0 0
Mutabi3 Tuesday, 15 January 2013 06:41 PM
""நடந்தது தற்கொலையாக இருக்கலாம்"" ????????????????
Reply : 0 0
முஸ்டீன் Tuesday, 15 January 2013 08:08 PM
எல்லாம் சரி வாழ்த்துக்கள்
01. சவுதி முல்லாக்களை நோக்கி தைரியமாக விரல் நீட்டும் நாம் நம்மூர் முல்லாக்களுக்கு எதிராக எப்போது விரல் நீட்டுவது?
02. ரிசானாவின் கொலை ஒரு புதிய திருப்பம்தான். எதிர்கால ரிசானாக்களையும் இப்போது சவுதியில் அடிமை சேவகம் செய்யும் பல்லாயிரம் ரிசானாக்களையும் எப்படிக் காக்கப்போகிறோம்?
03. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், தஃவா வியாபாரிகளும் இன்னும் கள்ள மௌனம் காப்பதன் அரசியல் என்ன?
04. எங்கே நமது அரசியல் வாதிகள் மன்னிக்கவும் அறிக்கை வாதிகள்? அவர்களின் நியாயப்படுத்தல்களை எப்படி நோக்கப் போகிறோம்?
05. இப்போது நாம் தொண்டை கிழியக் கத்தும் இந்த நியாயங்களை சவுதி அதிகாரத்தின் காதில் ஓங்கி உரைப்பதங்கு யார் தயார்?
Reply : 0 0
முஸ்டீன் Tuesday, 15 January 2013 08:15 PM
06. இணைய தளங்களிலும், ஆங்காங்கே கூட்டம் கூடி தமது மேதாவித்தனத்தை தனத்தை நிருபித்துக் கொண்டிருக்கும் ஆலிம் ஷாக்களும் அறிஞர் குலாமும் களத்தில் குதிப்பதற்குத் தயாரா?
07. தஃவா கம்பனிகள் (இஸ்லாமியப் பிரச்சார இயக்கங்கள்) எல்லாம் ரிசானாவின் கொலை தொடர்பாக மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் பகிரங்கமாகப் பதில் தருவார்களா?
08. இப்படியே கட்டுரை எழுதியும் கவிதை எழுதியும், பேட்டி கொடுத்தும், கதை எழுதியும், ப்ரேகிங் நியுஸ் கொடுத்தும் ஒன்றை மட்டும் சாதிக்கலாம் இப்படி ஒரு பக்கம் இருக்கிறத என்பதை தெரியப்படுத்தலாம் ஆனால் இவை ஒன்றும் சவுதிக்காரனுக்குத் தெரியப் போவதில்லை சோ அடுத்த கட்டம்???
(கொலைக் குற்றச்சாட்டின் வலி என்னவென்பது எனக்கும் தெரியும் அப்படியொரு குற்றச்சாட்டை தைரியமாக எதிர் கொண்டவன் நான் என்ற வகையில்)
இறுதியாக
இப்போது எழுதுபவர்களிலும், பேசுபவர்களளிலும், பலர் களத்திற்கு வரவே மாட்டர்.
Reply : 0 0
Thulip Wednesday, 16 January 2013 04:32 PM
மதம் என்பது மக்களை நல்வழிபடுத்தும் ஒரு பாதை ஆகும். ஆனால் தற்போதை மதவாதிகள் தமது மதி வெறிக்காக மதம் உருவாகிய நோக்கத்தையே மாற்றியமைக்க தயாராக உள்ளார்கள். ரிசானா என்ற இந்த குழந்தையின் மீது மேற்கொள்ளபட்ட கொடுமையைக்கூட கண்டனம் செய்ய அவர்களின் மதவெறி தடுக்கிறது.இதில் வேதனையான விடயம் அக்குழந்தைமீது சாட்டப்பட அபாண்டமான பழியைக்கூட சில மதவாதிகள் ஏற்றுகொள்ள தயாராக உள்ளதுதான். சாதாரணமான அறிவுரீதியாக சிந்திக்குகம் எவருக்கும் நடைபெற்றது ஒரு விபத்தே ஒழிய கொலை அல்ல என்பது புரியும். இதை புரிந்து கொள்ள நுண்ணறிவு தேவையில்லை. சாதாரண அறிவே போதுமானது.
Reply : 0 0
appunihi@yahoo.com Thursday, 17 January 2013 01:58 PM
kolaikku kolai theervakathu. ungal karuththukkalai nan mathikkinren. Aanal
Mullivaaikkalil koththu koththaka pala kulanthaikal udpada palar kollappaddapothu unkal karuththukkal enge ponathu. Vedi koluththi santhosappaddavarkale Sinthiyungal
Reply : 0 0
Rahmath Ali Sunday, 20 January 2013 08:34 AM
இதை வாசிப்பவர்கள் சவுதியில் அமுலில் இருப்பது குர்ஆன் கூறிய ஷரிஆ அல்ல என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். வழக்கு விசாரனையும் தீர்ப்பும் தவறானவை என்பதை கட்டுரையாளர் நன்கு விளக்கியுள்ளார். இதற்குப் பின்பும் சவுதிக்கு வக்காளத்து வாங்குவது முறையல்ல. தீர்ப்பிலும் விசாரணைகளிலும் தவறு உள்ளது என்று தெரிந்த பினபும் மீண்டும் மீண்டும் அதனை விமரிசிக்கக் கூடாது என்று வாதாடுவதும் குற்றம்தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago