2025 மே 02, வெள்ளிக்கிழமை

அடங்கியது கொழும்பு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய சேவைகளுக்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு  அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தாலும், கொழும்பு மாநகரம் உட்பட புறநகர்ப் பகுதிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு வீதி, ஹைலெவல் வீதி, கொழும்பு - காலி வீதி ஆகியவற்றில் வழமைபோல் வாகன நெரிசல் இல்லை என்று பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீதிகளில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே பயணிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன், திறக்க அனுமதிக்கப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே மக்கள் தென்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .