Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளையொன்றையோ அல்லது அதனுடன் இணைந்த வேறு எந்தவொரு நிறுவனங்களையும் இலங்கையில் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ, கடந்த 5ஆம் திகதி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தம்மை குறித்து வெளியிட்ட கருத்துகளை முழுமையாக நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளையொன்றையோ அல்லது அதனுடன் இணைந்த வேறு எந்தவொரு நிறுவனங்களையும் இலங்கையில் அமைப்பதற்கு நீதியமைச்சர் தலாதா அத்துக்கோரள எதிர்ப்பு வெளியிடவில்லை என, மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த போது, ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ரதிஸ்ஸ, கடந்த 5ஆம் திகதி கருத்து வெளியிட்டிருந்தாகவும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
57 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago
10 May 2026