2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அரசியல் இலாபத்தால் ஸ்திரத்தன்மை பாதிக்கும்

Editorial   / 2019 ஜூன் 17 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயி​ர்த்த ஞாயிறு  தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படாவிட்டால், அரசாங்கத்தை நடத்திச் செல்வதில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு என, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்புத் தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாகத் தெரிவித்து, முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தனர். நாட்டில் இடம்பெற்ற மிலேச்சேத்தனமான தாக்குதல் குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை நாட்டு மக்கள் அவதானித்து வருகின்றனர். முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பில், பதவிகளைத் துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .