2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அவசர சிகிச்சைப் பிரிவில் 186 பேர் அனுமதி

Editorial   / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 27ஆம் திகதி வரை 942 கொரோனா நோயாளர்கள் ஒக்சிசனின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட நீண்டநாள் நோய் தாக்கங்களுக்கு உள்ளான 4,347 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X