2025 மே 03, சனிக்கிழமை

‘அஸ்ட்ரா செனெகா', ஜூலை மூன்றாவது வாரம் கிடைக்கவுள்ளன’

Editorial   / 2021 ஜூலை 08 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குத் தேவையான அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள், ஜூலை மூன்றாவது வாரம் கிடைக்கவுள்ளன என தெரிவித்துள்ள கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனநாயக்க, இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசியை வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

நாட்டுக்குத் தேவையான அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் ஜூலை மூன்றாம்வாரம் இலங்கை வரவுள்ளன என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன் காரணமாக பைசர் தடுப்பூசியை இரண்டாவது டோஸாக வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறும அஸ்ட்ரா செனெகா இரண்டாவது டோஸிற்காக மூன்றாவது வாரம் வரை காத்திருக்குமாறும் எங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை பைசர் தடுப்பூசி வழங்குவதற்கான முற்பதிவுகள் அனைத்தும் இரத்துச்செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X