Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 மே 06 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் திங்கட்கிழமை (6) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அகில இலங்கை ஐக்கிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க உட்பட 11 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர்.
பொலன்னறுவை வெலிகந்த போன்ற தொலைதூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் சிறு குழந்தைகளுடன் இந்த இடத்திற்கு வந்துள்ளனர், மேலும் வடமத்திய மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை விட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஏன் வேலை வழங்கப்படவில்லை என இக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.
திங்கட்கிழமை (6) காலை பத்து மணியளவில் மாகாண சபையின் பிரதான வாயில் ஊடாக மாகாண சபை வளாகத்தினுள் நுழைந்த வேலையற்ற பட்டதாரிகள் குழு வடமத்திய மாகாண சபையின் அனைத்து நுழைவாயில்கள் மற்றும் வெளியேறுகளை அடைத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 May 2025
12 May 2025