Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 30 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்ட விரோத அத்து மீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதி வழங்கியதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (01) முன்னெடுக்கவிருந்த சேவை முடக்கல் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண வீதிகளில் நடைபெறும் சட்ட விரோத செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் செவ்வாய்க்கிழமை(30) வடக்கில் சேவை முடக்கல் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இ.போ.சபை, வடக்கின் ஆளுநர் மற்றும் துறைசார் தரப்பினர் இனிவரும் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் குறித்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
முன்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவையொன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.
ஆனாலும் இச்சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது
ஆனலும் எந்தவொரு தீர்வும் கிடைக்காத நிலையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படிருந்த நிலையில் ஆளுநர், இ.போ.சபை, பொலிஸார் இவ்விடையம் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக இ.போ.ச சட்டவிரோத சேவையை இடை நிறுத்தியுள்ளது.
அத்துடன் இணைந்த சேவை தொடர்பிலும் வரவுள்ள நாட்களில் இரு தரப்பினருடனும் கலந்து பேசி தீர்வை காண முயற்சிப்பதாகவும் எமக்கு உறுதி தந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் மக்களின் இயல்பு நிலையை சீர் குலைவதை தவிர்க்கும் வகையில் சேவை முடக்கல் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது ” என அவர் தெரிவித்தார்.
செந்தூரன் பிரதீபன்
4 minute ago
10 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
11 minute ago