2026 மே 01, வெள்ளிக்கிழமை

இடியுடன் கூடிய மழை: பலத்த காற்று வீசக்கூடும்

Editorial   / 2026 மே 01 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பை தேசிய வளிமண்டலவியல் மத்திய நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவினால் வெளியிடப்பட்டது.

2026 மே மாதம் 01 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பின் பிரகாரம்  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.  

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 50 மி.மீ-க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.  

மேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும்.  

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

 மழை நிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடலோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.  

காற்று:

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 25-35 கி.மீ அளவில் காணப்படும். புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக கன்கசந்துறை வரையிலான கடலோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 45-50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.  

கடலின் நிலை:

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடலோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண நிலையிலிருந்து ஓரளவு கொந்தளிப்பாக அமையலாம்.  

குறிப்பு: இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், அக்காலப்பகுதியில் அக்கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.  

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .