2025 ஜூன் 30, திங்கட்கிழமை

இன்றும் நாளையும் தபால்மூல வாக்களிப்பு

Editorial   / 2019 நவம்பர் 04 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்க பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று (04) மற்றும் நாளை (05) ஆகிய இரண்டு தினங்களில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல்கள் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த தினங்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என,  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 31 ஆம் மற்றும் இம்மாதம் 01ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கான தாபல்மூல வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது.

அரச ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் இதன்போது வாக்களித்திருந்தனர்.

இதேவேளை, குறிப்பிட்ட தினங்களில் வாக்களிக்க தவறியவர்கள், எதிர்வரும் 7 ஆம் திகதி வாக்களிக்க முடியும் என,  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X